Tuesday, November 24, 2009

மசாலா என்பது என்ன ?

ன்னுடன் வேலை பார்க்கும் தோழி சொல்லிய நகைச்சுவை சம்பவம்.

அவள் சீனா நாட்டை சேர்ந்தவள்.

ஒருநாள் இந்திய உணவு விடுதியில்  மசாலா தோசை சாப்பிட்டு இருக்கிறாள் தமிழ் நண்பர்களுடன், அப்பொழுது அவள் மசாலா என்றால் என்ன என்று கேட்டிருப்பாள் போல , நம் நண்பர்கள் மசாலா என்பது தோசையில் உள்ள உருளைக்கிழங்கு என்று சொல்லி இருக்கிறார்கள்.

அடுத்து ஒருமுறை அந்த பெண் மசாலா பால் சாப்பிட நேர்ந்தது ........இப்போது அவள் தேடுகிறாள்

இந்த பாலில் மசாலா (உருளைக்கிழங்கு) எங்கே என்று ?????????

ஹ ஹ என்ன கொடுமை சரவணா , மசாலாபால், மசாலாதோசை,

 தோசை என்பது உங்களுக்கே தெரியும் வட்டமாக இருக்கும் பால் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை ,

இதில் பொதுவாக உள்ள மசாலா ஏன் இரண்டிலும் வேறு வேறாக இருக்கிறது ???

தெரிந்தவகள் சொல்லுங்கள் தவறு எங்கே

மசாலாவிலா இல்லை மசாலா என்று பேர் வைத்ததிலா ????

Monday, November 2, 2009

Italy - Bus Travel - Without Ticket

நேற்று நானும் என் நண்பர்களும் எங்கள் நகரத்திலிருந்து சற்று தொலைவில் (அரை மணி நேர பயண தூரத்திலுள்ள) ஒரு சிறு மலைக்கு செல்ல முடிவு செய்தோம்.
நங்கள் மூன்று பேர் என்னிடம் 3 பயணச்சீட்டு இருந்தது .

இங்கு பயணச்சீட்டு வெளியில் உள்ள கடைகளில் கிடைக்கும் - TABACHI என்று பெயர் நம்ம ஊர் பெட்டி கடை போல இங்கு எங்கு பார்த்தாலும் இருக்கும் அணைத்து விதமான மது வகைகள், குளிர்பானங்கள், லாட்டரி சீட்டுகள், புகையிலை வகைகள் ரயில் மற்றும் bus டிக்கெட்டுகள் கிடைக்கும்.
ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலும் இந்த Tabachi தவிர மற்ற கடைகள் மூடியே இருக்கும் -  Shopping on Sunday - இங்கு இல்லவே இல்லை.

வார நாட்களில் 8 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல்  8  மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்கும் .

நம்முடைய கதைக்கு வருவோம் ,

நங்கள் 3 மணிக்கு புறப்பட்டோம், அந்த நேரம் ஞாயிற்று கிழமை என்பதால் பெரும்பான்மையான கடைகள் மூடியே இருந்தன , மேலும் 3 மணி வேறு வழக்கமான  Tabachi கூட மூடி  இருந்தது, நாங்களும் அருகில் உள்ள அணைத்து கடைகளிலும் கேட்டு பார்த்தோம் ஏங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை , பிறகு என்னிடம் இருந்த டிக்கெட் உடன்  bus இல் ஏறி பயணம் செய்தோம்.  1.20 EURO மதிப்புள்ள அந்த டிக்கெட் மூலம் 90  நிமிடத்திற்கு எந்த பேருந்திலும் பயணம் செய்யலாம், முதல் பேருந்தில் ஏறும்போது பயணச்சீட்டை validating machine இல் punch செய்ய வேண்டும். அங்கே மலைக்கு மேல் டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புறப்பட்டோம் .

மலையை சுற்றி பார்த்துவிட்டு திரும்பி வருவதற்கு , பயணசீட்டு வாங்க ஒரு கடைக்கு சென்றோம் அங்கும் டிக்கெட் இல்லை , அனைத்தும் தீர்ந்து விட்டது, அவர்கள் பேரூந்து ஓட்டுனரிடம் 1.50 EURO கொடுத்தால் டிக்கெட் கிடைக்கும் என்றார்கள், அங்கும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது , அன்றைக்கு நேரம் அவரிடமும் பயணசீட்டு   இல்லை.






பயணசீட்டு   இல்லாமல் எப்படி பயணம் செய்வது,  TC இடம் மாட்டினால் 55 Euro அபராதம், வேறு வழி மாட்டினால்  165 Euro கட்டுவது என்று எண்ணி பேரூந்தில் அமர்ந்து விட்டோம் ,  எங்களைப்போலவே ஒரு ஆப்ரிக்கா பெண்ணும் வந்து ஏறினால் இப்பொழுது கொஞ்சம் நிம்மதி துணைக்கு ஆல் கிடைத்துவிட்ட சந்தோசம்.




நங்கள் இது வரை பல முறை பயணம் செய்துள்ளோம் பெரும்பாலும் இங்கு உள்ள மக்கள் TC கண்முன் தெரிந்தால்தான் டிக்கெட் Punch செய்வார்கள், மேலும் TC  எப்போதாவது தான் வருவார்கள், அன்று ஞாயிற்று கிழமை அதனால் எங்களுக்கு ஒரு குருட்டு நம்பிக்கை TC வரமாட்டார் என்று , ஒரு வழியாக எங்கள் பயணம் முடிந்துவிட்டது , கடைசி நிறுத்தத்திற்கு முன்பே ( முன்னெச்சரிக்கையாக ) இறங்கி விட்டோம் . எதற்கு வம்பு கடைசி நிறுதத்திதில் யாராவது இருந்தால்?????

குறிப்பு : - எனக்கு தெரிந்த srilanka  நண்பர் ஒருவர் எப்போதும் டிக்கெட் பஞ்ச் செய்வதில்லையாம் என்னிடம் மிகவும் பெருமை பட்டுக்கொண்டார்!!!!!!!!!!!!

சத்தியமாக நான் அன்று தவிர மற்ற நாட்களில் கண்டிப்பாக டிக்கெட் இல்லமல் பயணம் செய்ததில்லை (Punch - செய்துவிட்டுத்தான்).

உங்களுக்கு  தைரியம்  இருந்தால் O.C  பயணம் ரொம்ப Easy.
எதற்கும் TC  மேல் ஒரு கண் இருக்க வேண்டும்.




பின்குறிப்பு :- இங்கு உள்ள பேருந்துகளில் கெட்ட வார்த்தைகள் நிறைய பாத்தேன் - தமிழில் தான் ( நம்மவர்கள் எங்கு சென்றாலும் - இதை விடுவதில்லை ) இங்கு உள்ளவர்களுக்கு புரியாது என்பதால் அவர்களையே கேட்ட வார்த்தைகளில் திட்டி எழுதி உள்ளார்கள் நம் ஈழ தமிழர்கள் .

...........இவர்கள் எப்போது திருந்துவார்களோ ............




தனா.

Made In China

நான் பெரும்பாலும்  சீனா தயாரிப்பு பொருட்களை தவிர்த்துவிடுவேன்.

ஆனால் இந்த உலகத்தில் எந்த மூலையில் சென்றாலும் நீங்கள் வாங்கும் பொருட்களில் சீனா தயாரிப்புகள் அதிகம் பார்க்கலாம். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் சீனாவில் தங்கள் பொருட்கள் தயார் செய்கின்றன காரணம் அங்கு உற்பத்தி செலவு மிக குறைவு.

நேற்று நான் இத்தாலி இல் பலேர்மோ நகரில் ஒரு தொப்பி வாங்க சென்றேன் ....எதேச்சையாக ஒரு தொப்பி விற்பவனை பார்த்ததும் ஒன்று வாங்க வேண்டும் என்று ஆசை ஏனெனில் சென்ற வரம்தான் நான் மொட்டை அடித்தேன்,.

தொப்பி வங்கினபின் அதை பார்த்ததும் எனக்கு புரியவில்லை made  in PRC என்று இருந்தது.

உடனடியாக எனக்கு புரியவில்லை எதோ ஒரு நாடு என நினைத்தேன்.

பிறகு ஒரு சிறு நினைவு

நான் என்னுடன் வேலை செய்யும் ஒரு சீனா நாட்டு பெண்ணின் பாஸ்போர்ட் பார்த்திருக்கிறேன் அதில் people-republic-of-china இப்பொழுது பொருத்தி பாருங்கள்

PRC = people-republic-of-china

அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது , என்னைப்போன்றவர்கள் Made-in China என்று இருந்தால் அதை வாங்குவது இல்லை அதற்க்காக இப்படி சுருக்கமாக எழுதுகிறார்கள் .

சீனர்களின் புத்திக்கூர்மையை என்னவென்று சொல்ல - அவர்கள் பொருட்கள் மட்டும் மட்டமானவை அல்ல புத்தியும் மட்டம் தான் என்பதை புரிந்து கொண்டேன்.

நீங்களும் என்னைபோல் சீனா பொருட்களை விரும்பதவர்களா , இனிமேல் இதை கவனிக்கவும்
Made-in சீனா- அல்லது PRC = people-republic-of-சீனா

என்று இருந்தால் தவிர்த்துவிடவும் .

தனா

Friday, October 23, 2009

TRAFFIC IN ITALY

இங்கு (இத்தாலி) ஒரு கும்பத்திற்கு ஒரு வாகனம் (கார்) சில வீடுகளில் இரண்டு அல்லது மூன்று கூட உண்டு, நம்ம ஊரில் ஒரு பத்து குடும்பத்துக்கு ஒரு கார் கூட இருக்காது , ஆனால் நம்ம ஊர் சாலைகளை பாருங்கள் எவ்வளவு வாகன நெரிசல் இங்கு மழை காலங்களில் மட்டுமே வாகன நெரிசல் பார்க்கலாம். மேலும் நம்ம ஊரில் நடப்பது போல் அகோரமான சாலை விபத்துக்கள் நடப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. நான் கடந்த இருபது மாதங்களாக தினமும் இரண்டு மணி நேரம் காரில் பயணம் செய்கிறேன் இதுவரையில் ஒரு விபத்து கூட பார்த்ததில்லை.

மேலும் இங்கும் நம் ஊரில் இருப்பது போல நான்கு வழிப்பாதை உள்ளது, எனக்கு தேய்ந்த வரையில் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்ல எனக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் தேவை பயண தூரம் வெறும் அறுபது கிலோ மீட்டர் மட்டுமே.

ஆனால் இத்தாலி நாட்டில் பலேர்மோ என்ற நகரில் இருந்து இருநூற்று பத்து கிலோமீட்டர்  தொலைவில் உள்ள கடனிய என்ற நகருக்கு செல்ல பேருந்து எடுத்துக்கொண்ட நேரம் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே, நீங்கள் கேட்கலாம் ஈன இவ்வளவு நேரம் என்று , இங்கு பிரதான சாலைகளில் நூற்று முப்பது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, நான் திரும்பி பலேர்மோ வரும்போது ஓட்டுனருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன் அப்போது எங்கள் வாகனம் சீராக நூற்று இருபது  கிலோமீடேரில் சென்று கொண்டிருந்தது     ஏன் இது மாதிரி நாம் ஊர் சாலைகளில் செல்ல முடிவதில்லை. நமது சாலை வசதிகள் ஒன்றும் குறை சொல்ல முடியாது இப்பொழுது உலக தரத்திற்கு இணையான சாலைகள் நம்மிடம் உள்ளன , பின்பு வேறென்ன பிரச்சினை என்கிறிர்கள?

ஆம் நம்மிடம் உலக தரம் வாய்ந்த ஓட்டுனர்கள் இல்லை.

ஒழுக்கமுடன் சாலை விதிகளை பின்பற்றுவோர் இல்லை.


ஒழுக்கமுடன் சாலை விதிகளை கடைப்பிடிக்கும்  காவலர்கள் இல்லை.

 ஐந்துக்கும் பத்துக்கும் லஞ்சம் வாங்கும் காவலர்கள்.

சாலை விதிகளை மீறும் அதிகார வர்க்கத்தினர்.

ஊழல் பெருச்சாளிகள் அரசியல் வாதிகள்.

பொறுமையில்லாத வாகன ஓட்டிகள்

இன்னும் எத்தனையோ எனக்கு தெரியாத உங்களுக்கு தெரிந்த.

இந்த தலைப்பிற்கு நான் இன்னும் கொஞ்சம் படங்களை இணைத்தல் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

விரைவில்  வண்ணப்படங்களுடன் சிந்திப்போம் நண்பர்களே.

என்றும் நட்புடன்
தனா.

Introduction

என் அன்பு நண்பர்களுக்கு,
என்னால   முடிஞ்சது சும்மா இருக்குற நேரத்துல எனக்கு தெரிந்ததை கிறுக்குகிறேன், என்னுடைய படைப்புகளில் எதாவது தவறு இருந்தால் தயவு செய்து அதை கருத்துக்கள் மூலம் தெரிய படுத்துங்கள்.

உங்கள் கருத்துக்கள் என்றும் வரவேற்கப்படும்.

இப்படிக்கு
உங்கள் அன்பு நண்பன்
தனசேகரன் ஏகனாபுரம் அர்ஜுனன்