மேலும் இங்கும் நம் ஊரில் இருப்பது போல நான்கு வழிப்பாதை உள்ளது, எனக்கு தேய்ந்த வரையில் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்ல எனக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் தேவை பயண தூரம் வெறும் அறுபது கிலோ மீட்டர் மட்டுமே.
ஆனால் இத்தாலி நாட்டில் பலேர்மோ என்ற நகரில் இருந்து இருநூற்று பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடனிய என்ற நகருக்கு செல்ல பேருந்து எடுத்துக்கொண்ட நேரம் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே, நீங்கள் கேட்கலாம் ஈன இவ்வளவு நேரம் என்று , இங்கு பிரதான சாலைகளில் நூற்று முப்பது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, நான் திரும்பி பலேர்மோ வரும்போது ஓட்டுனருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன் அப்போது எங்கள் வாகனம் சீராக நூற்று இருபது கிலோமீடேரில் சென்று கொண்டிருந்தது ஏன் இது மாதிரி நாம் ஊர் சாலைகளில் செல்ல முடிவதில்லை. நமது சாலை வசதிகள் ஒன்றும் குறை சொல்ல முடியாது இப்பொழுது உலக தரத்திற்கு இணையான சாலைகள் நம்மிடம் உள்ளன , பின்பு வேறென்ன பிரச்சினை என்கிறிர்கள?
ஆம் நம்மிடம் உலக தரம் வாய்ந்த ஓட்டுனர்கள் இல்லை.
ஒழுக்கமுடன் சாலை விதிகளை பின்பற்றுவோர் இல்லை.
ஒழுக்கமுடன் சாலை விதிகளை கடைப்பிடிக்கும் காவலர்கள் இல்லை.
ஐந்துக்கும் பத்துக்கும் லஞ்சம் வாங்கும் காவலர்கள்.
ஐந்துக்கும் பத்துக்கும் லஞ்சம் வாங்கும் காவலர்கள்.
சாலை விதிகளை மீறும் அதிகார வர்க்கத்தினர்.
ஊழல் பெருச்சாளிகள் அரசியல் வாதிகள்.
பொறுமையில்லாத வாகன ஓட்டிகள்
பொறுமையில்லாத வாகன ஓட்டிகள்
இன்னும் எத்தனையோ எனக்கு தெரியாத உங்களுக்கு தெரிந்த.
இந்த தலைப்பிற்கு நான் இன்னும் கொஞ்சம் படங்களை இணைத்தல் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
விரைவில் வண்ணப்படங்களுடன் சிந்திப்போம் நண்பர்களே.
என்றும் நட்புடன்
தனா.
இந்த தலைப்பிற்கு நான் இன்னும் கொஞ்சம் படங்களை இணைத்தல் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
விரைவில் வண்ணப்படங்களுடன் சிந்திப்போம் நண்பர்களே.
என்றும் நட்புடன்
தனா.
