Sunday, May 23, 2010

தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் பாழ் - தினமலர்

ஓட்டு வங்கி அரசியல் என்ற நிலையில் இருந்து ஜனநாயகம் விடுபடாத வரை, பொதுமக்களுக்கு முழுமையான அளவில் நன்மை செய்கிற அரசுகள் அமைவது மிகவும் கடினம் என்ற உண்மையை பறைசாற்றும் வகையில், தமிழக அரசின் நிதி செயல்பாடுகள் மீதான மத்திய கணக் காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை அமைந் துள்ளது. குறிப்பாக, மின்துறை, போக்குவரத்து, சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக அமைந்துள்ளதும், அரசின் வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்களின் ஊதியத் திற்கும், நிர்வாக செலவுகளுக்குமே செல்வதும் தெரியவந்துள்ளது.


கடந்த 2009 மார்ச் மாதத்துடன் முடிந்த ஆண்டிற்கான நிதிக் கணக்குகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை ஆய்வு செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை, அரசு நிர்வாகம், நிதி பயன்பாடுகளிலும், ஒதுக்கீடுகளிலும், திட்டமிடுவதிலும் எந்தளவிற்கு அலட்சியமாக இருந்துள்ளது என் கிற அதிர்ச்சி தகவல்களை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளின் நிர்வாக செலவின ஒதுக்கீடுகளை தணிக்கை செய்து ஆய்வுக்கு சமர்ப்பிக்கும் பணியை மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை செய்து வருகிறது. இதன் மூலம் அந்தந்த மாநிலங் களின் தேவை, அங்குள்ள பொதுத் துறை நிறுவனங்களின் செயல் பாடு, அரசின் செயல்பாடு, செலவினங்கள், திட்டமிடுதல், திட்டம் சாரா செலவினங்கள், திருப்பியளிக்கப்பட்ட நிதி ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள முடியும். இந்த தணிக்கை அறிக்கைகள், குறிப்பிட்ட ஆண்டிற்கு அடுத்த ஆண்டே தெரிய வரும். இந்த அறிக்கைகள், பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சமர்ப்பிக்கப் படும்.

இது போன்ற மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை இந்த ஆண்டு, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பொருளாதார வல்லுனர் களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை மூன்று அத்தியாயங்களை கொண் டுள்ளது. நிதி நிலை ஒழுக்க முறை; திட்டம் சாரா செலவினத்தை குறைக்க வேண்டியதன் தேவை; அரசு முதலீடுகளின் மீதான ஆய்வு; திட்டங்களை முடிப்பதில் காலதாமதம்; அதிகபட்ச கடன் வரையறை; நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் திட்ட கட்டுப்பாடு உள் ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. திட்டம் சாரா செலவுகளையும், வருவாய் தராத செலவினங்களையும் தவிர்க்க தமிழக அரசு, சரியான நடவடிக்கை எதுவும் மேற் கொள்ளவில்லை என்பதை, அறிக் கையின் மூலம் அறிய முடிகிறது. அது போல், கடன் நிலை; வரவு - செலவு திட்டம் சாரா கடன் பொறுப்புகள்; ரொக்க கையிருப்பு மேலாண்மை போன்றவைகளும் சரி வர கையாளப்படவில்லை.

கடந்த 2005 - 06ம் ஆண்டில், தமிழகத்தில் மிகை வருவாய் இருந்தது. இதை தக்க வைக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கவில்லை. மாறாக, சமூக, பொருளாதாரப் பணிகளுக்காக அதிக நிதி ஒதுக்கி வீணடித்ததுடன், வருவாய் வரவினங்களில் கவனம் செலுத்தாமலும் அரசு கோட்டை விட்டுள்ளது. குறிப்பாக, மொத்த செலவினத் தில் திட்டம் சாரா செலவினம் மட்டும் 80.33 சதவீதமாக இருந்தது. இதில், சம்பளங்கள், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல், ஊக்க உதவிகளுக்காக மட்டும் அரசு ஒதுக்கியது 78.44 சதவீதம். அரசு கழகங்கள், ஊரக வங்கிகள், கூட்டு பங்கு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் அரசு செய்திருந்த முதலீட்டிலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக அரை சதவீத வருமானமே கிடைத்துள்ளது. அதே சமயம், அரசு பெற்ற கடன்களுக்காக 8.4 சதவீத வட்டி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு, தனது முதலீடுகளில் இருந்து அதிகப்படியான வருவாயை பெறுவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகியுள்ளது. நிதித் தேவை அதிகரித்து வரும் நிலையில், அரசு வழங்கியுள்ள கடன்கள், முன் தொகைகள், அதற்கான வட்டி பெறும் வீதம் குறைந்து வருவது ஆகியவை, அரசின் கடன் சுமையை தாங்க இயலாத நிலைக்கு இட்டு செல்லும். திட்டம் சாரா செலவினத்தை அரசு குறைத்தே தீர வேண்டும்; வரி மற்றும் வரியல்லாத ஆதாரங் களில் இருந்து கூடுதல் நிதியை திரட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. ஆனால், அதற்கு மாறாக, தமிழக அரசு வருவாய் அல்லாத செலவினங்களை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இது நிச்சயம் வரும் காலங்களில் தமிழகத்தின் பொருளாதார நிலையை வெகுவாக பாதிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.

வருவாய் வரவினங்களில் தமிழக அரசு எப்படி கவனம் செலுத்த தவறியதோ, அதுபோல் திட்டங்களை முடிப்பதிலும் கவனம் செலுத்த தவறியதாக, அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. குறிப்பாக, பாசன திட்டங்களை முடிப்பதில் அளவு கடந்த தாமதத்தினால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால விரயத்தை தடுக்கவும், திட்டமிடுவதை விட கூடுதல் செலவு ஏற்படாமல் தவிர்க்கவும், பணிகளை முறையாக திட்டமிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். இதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். வரவு - செலவு திட்டத்தில் கட்டுப் பாடு இல்லாத தன்மை தமிழக அரசிடம் அதிகம் காணப்படுகிறது. பல திட்டங்களில், ஒதுக்கப் பட்ட நிதி சரியாக செலவிடப் படாமல் திருப்பி ஒப்படைக்கப் பட்டுள்ளது. சில திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப் படவும் இல்லை. திருப்பிச் செலுத்தப்படவும் இல்லை.

கடந்த 2008- 09ம் ஆண்டில் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில், 7,311 கோடியே 45 லட்சம் ரூபாய் மீதமாகியது. அப்போது, 153 கோடியே 65 லட்சம் ரூபாய் மிகை செலவினம் சரிகட்டப்பட்டிருந்தது. அரசின் உதவி மானியங்கள் பெறும் 228 தன்னாட்சி நிறுவன அமைப்புகள், குழுமங்கள் தங்களது ஆண்டு கணக்குகளை சமர்ப்பிப்பதில் காலம் தாழ்த்தினர். இதை அரசு கண்டு கொள்ளவில்லை. அதே போல், அரசு பணம் 9.47 கோடி ரூபாய் உள்ளடங்கிய கையாடல்கள், திருட்டு, இழப்புகள் போன்ற 503 சம்பவங்களை நிதி ஆண்டு முடியும் வரை அரசு தெரிவித்து வந்தது. இவற்றின் மீது முறையான இறுதி நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நிதி நிர்வாகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், இது போன்ற எல்லாவிதமான கையாடல்கள் மீதும் துறை ரீதியான விசாரணைகளை விரைவாக முடித்து, குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், இது போன்ற நிகழ்வுகள் பிற்காலத்தில் ஏற்படாமல் தடுக்க, உள் கட்டுப்பாட்டு முறைகளை எல்லாத்துறைகளிலும் வலுப் படுத்த வேண்டும். இதிலும் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 293(3)ன் கீழ், வரவு - செலவு திட்டம் சாரா கடன்களை பெறுவதற்கு தடை செய்யப்பட் டுள்ளது. ஆனால், தமிழக அரசு இதை கண்டு கொள்ளாமல், வரவு - செலவு திட்டம் சாராத கடன்களை தொடர்ந்து பெற்று வருகிறது. இது மாநிலத்தின் நிதிப் பொறுப்புகளை அதிகப்படுத்தி வருவதுடன், தேவையற்ற நிதி சுமையையும் ஏற்படுத்தி வருகிறது.

அரசின் வருவாய் வரவினம் 16 சதவீதமாகவும், வருவாய் செலவினம் 25 சதவீதமாகவும் ஒன்றுக்கு ஒன்று சற்றும் தொடர்பில்லாமல் உள்ளது. அதாவது வருவாயை விட அரசின் செலவு மிக அதிகமாக உள்ளது. இதற்கு அரசு ஊழியர் ஊதிய உயர்வு, ஓய்வூதியம், ஊக்க உதவிகளே பெருமளவு காரணமாக அமைந்துள்ளது. வரவு - செலவு திட்டத்தை அரசு சரியாக முறைப்படுத்தவில்லை என்பதை பட்டவர்த்தனமாக காட்டும் வகையில், பதிமூன்று பணிகளில் ஒப்படைக்கப்பட்ட நிதியானது, எவ்வளவு நிதி மீதம் இருந்திருக்க வேண்டுமோ அதை விட அதிகமாக இருந்தது. அதாவது, 1,192 கோடியே 46 லட்சம் ரூபாய் தான் மீதம் இருக்க வேண்டும். ஆனால் 1,286 கோடியே 77 லட்சம் ரூபாய் திரும்ப ஒப்படைப்பு செய்யப் பட்டிருந்தது. தேசிய ஊரக நலவாழ்வு இயக்கம்: தேசிய ஊரக நல வாழ்வு இயக்கம், மத்திய அரசால், கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவக்கப் பட்டது. கிராமப்புற மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக இந்த திட்டம் துவக்கப்பட்டது. குறைந்த செலவில், பாரபட்சமற்ற முறையில் தரமான நல வாழ்வு வசதிகள் கிடைக்க வழி வகை செய்ய, இந்த இயக்கத்தின் சார்பில் பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் இந்த இயக் கத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மத்திய தணிக்கை துறை ஆய்வு செய்த போது பல்வேறு உண்மை நிலவரங்கள் தெரிய வந்தன. குறிப்பாக, இயக்கத்தின் தொலைநோக்குத் திட்டங்கள், மாவட்ட, வட்டார மற்றும் கிராம ஆண்டு திட்டங்கள் முறைப்படி தயாரிக்கப் படவில்லை. தணிக்கை நடந்த ஏழு மாவட் டங்களில், அவசர, பேறு கால, சிசு கவனிப்பு வசதிகள் போன்றவைகளுக்காக தரப்பட்ட 62 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. கடந்த 2006-09ம் ஆண்டுகளில், தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்திற் கான 53 கோடியே 95 லட்சம் ரூபாய், வேறு திட்டங் களுக்கு மாற்றப்பட்டது. வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார துணை நிலையங்கள் அவற்றிற்கான நிர்ணயத்தின் படி போதுமான ஊழியர் கள் இல்லை. பல வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த சேமிப்பு வசதி இல்லை. பல இடங்களில் அவசர கால, விபத்து சிகிச்சைக் கான அறைகள் இல்லை. பல இடங்களில் அறுவை சிகிச்சை அறைகள் இல்லை. திட்ட மேலாண்மை பிரிவுகளுக்குத் தேவைப்படும் 1,242 பணியாளர் களுக்கு பதில் 52 பணியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள் ளனர். அதை விட பெரிய கொடுமையாக 2005 -09ம் ஆண்டுகளில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 575 குழந்தைகளில், ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 695 குழந்தைகளுக்கு, மூக்குக் கண்ணாடிகள் வழங்கப் படவில்லை.

விரிவான தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்: தமிழகத்தில் தரிசு நில மேம் பாட்டு திட்டம் கடந்த 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதற் கான தணிக்கை அறிக்கையில், வருவாய் துறையின் தரிசு நில பதிவேடுகளின் தவறுகளையும், பல் வேறு முகமைகளுக்கிடையே திட்ட மிடுதல், ஒருங்கிணைப்பு, நிதி மேலாண்மை மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத் தியுள்ளது. திட்ட நடைமுறைப் படுத்தலின் முன்னேற்றத்தை மதிப்பிடாமல், நிதிகள் விடுவிக்கப்பட்டதால், 53 கோடியே 80 லட்சம் ரூபாய் வீணாக வங்கியில் முடங்கி கிடந்தது. இத்திட்டத்தில் நிறுவனங் களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட 272 எக்டேர் அரசு நிலம் பயிரிடப்படவே இல்லை. அவை திரும்ப பெறப்படவும் இல்லை.

நில ஆவணங்களை கணினி மயமாக்குதல்: பயனுள்ள நில சீர் திருத்தத்தை உறுதிபடுத்தவும், பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவை செய்யவும், மத்திய அரசு உதவியுடன், தமிழகத்தில், "நில ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டம்' கடந்த 88-89ம் ஆண்டில் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கி 20 ஆண்டுகள் ஆன பின்னும் நில ஆவணங்கள் இன்னும் முழுமையாக கணினிமயமாக்கப்படாத நிலையிலேயே உள்ளது. கடந்த 2000-08 வரையில் மத்திய அரசு அளித்த நிதியில் 9 கோடியே 94 லட்சம் ரூபாய், தமிழ்நாடு மின்னணு நிறுவனத் திடம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. தேவையான சாப்ட்வேர் இல்லாததால், 8 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் வாங்கப் பட்ட கணினி பொருட்கள் வீணடிக்கப்பட்டிருந்தன.

நட்டத்தை சந்தித்து வரும் போக்குவரத்து கழகங்கள்: தமிழகத்தில் மொத்தம் ஏழு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இவற்றில், 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 20 ஆயிரத்து 104 பஸ்கள் இருந்தன. இதில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 700 பேர் பணிபுரிந்தனர். அரசு பஸ்களில், சராசரியாக தினமும் ஒரு கோடியே 96 லட்சத்து 96 ஆயிரம் பேர் பயணித்தனர். ஏழு போக்குவரத்து கழகங்களும் சேர்த்து 2008-09ம் ஆண்டில் மொத்தம் 5,050 கோடியே 63 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டின. இது மாநிலத்தின் மொத்த உற் பத்தியில் 2.21 சதவீதம். இதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், 99.5 சதவீதம் ஆதாயமற்ற தடத்திலேயே பஸ்களை இயக்குகிறது. இந்த போக்குவரத்து கழகத்திற்கு 95 கோடியே 74 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது. மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களால், மதுரை போக்குவரத்துக் கழகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த போக்குவரத்துக் கழகம் 182 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. வழித் தடங்களை ஆய்வு செய் யாமல் மாற்றியதால், மதுரைக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மதுரை, கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள் உழவர் சந்தைகளுக்கு சிறப்பு சேவைகளை இயக்கியதால், ஆறரை கோடி ரூபாய் நட்டம். பஸ் மற்றும் பயணிகள் இல்லாததால் அரசு போக்குவரத்துக் கழகத் திற்கு 169 கோடியே 17 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர் களுக்கும், எரிபொருளுக்கும் மட்டும் 78.49 சதவீதம் அளவு தொகை செலவிடப்படுகிறது. அதிகப்படியான பணியாளர்கள் காரணமாக சென்னை, மதுரை, கும்பகோணம், விரைவு போக்குவரத்து கழகங்களில் மட்டும் 542 கோடியே 38 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் தேவைக்கு அதிகமான பணியாளர்கள் பணியில் உள்ளனர். இப்படி பல்வேறு பிரிவுகளிலும் போக்குவரத்துக் கழகம் நட்டத்தை சந்தித்து வருகிறது.

தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஏற்பட்ட நஷ்டம்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கரும்பு உற்பத்தி செய்யும் நான்கு லட்சத்து 23 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் அந்த ஆலைகளை சார்ந்திருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 15 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இதற்கென தனியே கமிஷனர் நியமிக்கப்பட்டு, அவரது கட்டுப் பாட்டில், ஆலைகளை ஒழுங்குமுறைப்படுத்தல், கண்காணித்தல், மேற்பார்வையிடுதல், அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து 2004-05லிருந்து 2008-09க்கு உட் பட்ட காலத் திற்கான தணிக்கை அறிக்கை, அவற்றின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இவற்றின் மொத்த இழப்பு 1,475 கோடி ரூபாய்.

தொழில்துறைக்கான ஒதுக்கீட்டை முழுவதும் செலவு செய்யாத அவலம்: தமிழக அரசின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், 20 சதவீதத்திற்கு அதிகமாக உள்ள பணிகளில் வருவாய் ஒதுக்கீடுகளில் நிறைய பணம் மீதமாகியுள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறைக்கு ஒதுக்கீடு 111 கோடியே 22 லட்சம் ரூபாய். செலவானது 74 கோடியே 53 லட்சம் ரூபாய். மீதி 36 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவு செய்யவில்லை. நிதித்துறைக்கு ஒதுக்கீடு 528 கோடியே 57 லட்சம் ரூபாய். செலவானது 403 கோடியே 72 லட்சம் ரூபாய். 124 கோடியே 85 லட்சம் செலவு செய்யவில்லை. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறைக்கான ஒதுக்கீடு, செலவுகளும் அப்படித்தான் இருக்கின்றன. தொழில் துறைக்கு ஒதுக்கீடு 349 கோடியே 29 லட்சம் ரூபாய். செலவானது 188 கோடியே நான்கு லட்சம் ரூபாய். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு ஒதுக்கீடு 94 கோடியே நான்கு லட்சம் ரூபாய்; செலவு 51 கோடியே மூன்று லட்சம் ரூபாய். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பிற்படுத்தப்பட் டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உட்பட பல துறைகளிலும் இதே நிலை தான் உள்ளன. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவிற்கு ஒதுக்கீடு 1,062 கோடியே ஏழு லட்சம் ரூபாய். செலவானது 515 கோடியே 88 லட்சம் ரூபாய் மட்டும் தான். பள்ளிக் கல்வித்துறை, பால் வளத் துறைக்கு ஒதுக்கப்பட்ட முழு நிதியும் செலவு செய்யப்படவில்லை.
எந்த திட்டமும் இல்லாமல் வெட்டிச் செலவு
* வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி, வருமான வரி, விற்பனை வரி என்ற பல பெயர்களில் மக்களிடம் இருந்து மத்திய, மாநில அரசுகள் வருவாயைப் பெறுகின்றன. இதன் மூலம் பெறப்படும் வருமானத்தை முறையாக மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடுகிறதா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது.

* இலவச மின்சாரத்திற்காக ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது

* டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பஸ் கட்டணங்களை உயர்த்தாமல், பஸ் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு மானியமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வாரி வழங்குகிறது.

* உணவு மானியமாக ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வரை அரசு வழங்குகிறது.

* கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், வீ.வ.வாரியம், குடிசை மாற்று வாரியம், டிட்கோ, டான்சி, சிட்கோ எனப்படும் பல வகை அரசு நிறுவனங்கள் எல்லாமே நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. இவற்றிற்கு, மானியங்களை அரசு வாரி வழங்குவதால், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. புதிய மின் நிலையங்களை அமைக்க தனியாரிடமும், உலக வங்கியிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலையில் உள்ளது. இலவச "டிவி'க்கு வழங்கிய 3000 கோடி ரூபாயை மின் நிலையம் அமைக்க ஒதுக்கியிருந்தால் தமிழகத்தில் இன்று மின் வெட்டே இருந்திருக்காது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் மிகப்பெரிய அணைக்கட்டோ, அனல் மின் நிலையங்களோ துவங்கப்படவே இல்லை. பஸ் போக்குவரத்துக் கழகங்களை அரசே நடத்த வேண்டுமா? தமிழக அரசுக்கு மிகப்பெரும் சுமையாக இருப்பது அரசு பஸ் போக்குவரத்துக் கழகங்கள் தான். அரசு, நிர்வாகம் செய்வதை விட்டு விட்டு வர்த்தகம் செய்வதால் தான் மிகப்பெரும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கட்டணம் நிர்ணயம், பஸ்கள் ஒழுங்காக இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பை மட்டும் அரசு வைத்துக் கொண்டு பஸ்களை தனியாரிடமோ, கூட்டுறவு அமைப்புகளிடமோ விட்டு விடலாம். அரசு போக்குவரத்து ஊழியர்களிடமே, குறிப்பாக 10 ஊழியர்களுக்கு ஒரு பஸ் என்ற முறையில் பிரித்து கொடுத்து தொழிலாளர்களை நிர்வாகிகளாக மாற்றி விடலாம். தனியாருக்கு இணையாக அவர்களும் பஸ்களை இயக்குவர். லாபத்தை அவர்களே பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அரசுக்கு சுமையும் குறையும். தொழிலாளர்களிடம் இருந்து எதிர்ப்பும் வராது.
நன்றி தினமலர்

Friday, May 21, 2010

Super Power India -01

நமது நாட்டில் மற்ற வளர்ந்த நாடுகளைப்போல் எல்லா வசதிகளும் உள்ளன ஆனால் அவை தரமற்றவையாக உள்ளதே இன்றைய பெரும் பிரச்சினை.

வளர்ந்த நாடுகளைப்போல் நம் நாட்டில் இலவசமாக அல்லது மலிவு விலையில் கிடைப்பவை
அ) கல்வி
ஆ) மருத்துவம்
 இ) உணவு பொருட்கள் (நியாய விலைக்கடை
ஈ) வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை மையங்கள்

ஒவ்வொன்றாக பார்ப்போம்
கல்வி
முதல் ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி செல்வோம், அப்பொழுது படித்தவர்கள் எல்லாம் அரசு பள்ளிகளில் தான் பயின்றார்கள், ஏன் அப்துல் கலாம் கூட அரசு பள்ளியில் தான் படித்தார்,

இடையில் வந்ததுதானே இந்த தனியார் கல்வி கூடங்கள்.

நாம் ஏன் மறுபடியும் இந்த பள்ளிகள் அனைத்தையும் அரசுடமையக்கக்கூடாது?
அல்லது அரசு பள்ளிகளின் தரத்தை இந்த கல்வி நிறுவனங்களை விட சிறப்பாக மாற்றிட அரசால் முடியாதா?
சில அல்லது பல பெரும் பண முதலைகளின் நன்மைக்காக நம் அரசு ஒட்டு மொத்த மக்களின் நன்மைகளையும் குழி தோண்டி புதைக்கின்றதே இது நியாயமா?

மருத்துவம்
மேலே சொன்னவைகளில் கல்வி என்ற சொல்லுக்கு பதிலாக மருத்துவம் என்று வாசிக்கவும் ....
திரும்பவும்
சில அல்லது பல பெரும் பண முதலைகளின் நன்மைக்காக அரசு ஒட்டு மொத்த மக்களின் நன்மைகளையும் குழி தோண்டி புதைத்து பல நாட்கள் ஆகின்றன.


ஊழல் - லஞ்சம்
இந்திய ஜன நாயகத்தின் சாபக்கேடு

எங்கு பார்த்தாலும் ஊழல் லஞ்சம் என்று கேள்வி கேட்பவர்களுக்கு என்னுடைய பதில் ....

பல லட்சம் லஞ்சம் கொடுத்து அரசாங்க பணியில் சேரும் ஒருவன் காசு வாங்காமல் வேலை செய்ய வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

காசு யார் வாங்குவது , நாம் காசு வாங்கி MLA, MP,  அமைச்சர் களாக ஆன மாண்புமிகு தலைகள் மற்றும் அவர்களின் அல்லக்கைகள் தான்

அப்படியே காசு கொடுக்காமல் காசு வாங்காமல் வேலை செய்யும் நல்லவர்களையும் நாம் விட்டட்லும் இவர்களிப்போன்ர அல்லக்கைகள் விடுவதில்லை.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் நம் மஞ்சள் நிறத்தி வெளிவராத வெள்ளை பத்திக்கைகள் .....

எந்த கட்சி ஆட்சி நடத்துகிறதோ அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்கள் ...........

நல்ல ஜனநாயகம்........

Saturday, May 15, 2010

தமிழ் புத்தாண்டு - படித்ததில் பிடித்தவை - 04

தமிழ் புத்தாண்டு சிறந்த ஆய்வு கட்டுரை படங்களுடன் அருமையான விளக்கம்.






நான் சித்திரை முதல் நாளைத்தான் புத்தாண்டாக கொண்டாடுகிறேன் நீங்கள்.........


அரசியல் காரணங்களுக்காக இயற்கை விதிகளை மாற்றக்கூடாது 

"WE HAVE TO FOLLOW & LIVE WITH NATURE,
POLITICAL OR THE RULERS ARE SECONDARY, 
WE SHOULD NOT MISGUDIE OUR NEXT GENERATIONS..."

Tamil Numbers - படித்ததில் பிடித்தவை - 03

இவ்வளவு  இருக்கா!!!!!!!!!!!!!!!!!!!

படித்ததில் பிடித்தவை - 02

1)செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....

2)
ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3)
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

4)
மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

5)
மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

11)
தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(
ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

12)
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

13)
முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் செல்லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

14)
லவ் லட்டருக்கும், எக்ஸாம்க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?


16)
கணவன்: காலெண்டர்ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

17)
சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

18)
நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.

19)
நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* J to the A to the V to the A --- JAVA
*
கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்லாத்தான் வரும்.
* C
க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

20)
வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1.
படிப்பு
2.
விளையாட்டு
3.
பொழுது போக்கு
4.
காதல்
5.
6.
7.

ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!
 

படித்ததில் பிடித்தவை - 01

இன்றைய தமிழகம் 




இத்துடன் இவர் மறந்த இன்னும் சில இலவசங்கள் 
நிலம் இல்லா ஏழைக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசம் 
அரசு புறம்போக்குகளை வளைத்துப்போட்டால் இரண்டு வருடத்தில் பட்டா இலவசம் .
விவசாயம் செய்ய மின்சாரம் இலவசம் ( பெயரளவிற்கு )
விவசாய நிலம் காய்ந்து போனால் நிவாரண உதவி இலவசம்.
வெள்ளம் வந்து அழிந்து போனால் நிவாரண உதவி இலவசம்.
பள்ளி செல்ல மிதிவண்டி இலவசம், பாடப்புத்தகம் இலவசம்.
படித்து முடித்து 
வேலை இல்லாமல் ஊர் சுற்ற மதம் 250 ரூபாய் ஊக்கத்தொகைஇலவசம்
வயதாகி விட்டால் முதியோர் உதவித்தொகை 400ரூபாய்இலவசம்


..

வருஷத்தில் இருமுறை வேட்டி சேலை இலவசம்
ஒவ்வொரு எலேக்ட்சனிலும் 2000  முதல் 5000 ம் வரை காசு இலவசம்.
தேர்தல் நேரத்தில் வீடு உபயோக பொருட்கள் TV Fridge, Mixer, Grinder, வெட்டி சேலை, மூக்குத்தி இலவசம் இலவசம்.......
பொது கூட்டத்திற்கு பொய் வந்தால் பிரியாணி TASMAC brandy மற்றும்  500  ரூபாய் கூலி இவை எல்லாமே இலவசம்....

வேறு என்ன வேண்டும்.....

மாநாடு என்றால்.. தேர்தல் என்றாலும்.........நாவில் தேனூறும் இலவசங்கள் ஏராளம்...........




Monday, May 10, 2010

வல்லரசாக முதல் தேவை

வல்லரசாக முதல் தேவை!!!!

ஏழை விவசாயிகளின் முன்னேற்றம்!

நமக்கு தேவை இன்னொரு பசுமை புரட்சி !!!

எப்படி சாத்தியம் ????

நீர் மேலாண்மை.....

ஆம் நமக்கு தேவைக்கு அதிகமாகவே இயற்கை நீர்வளம் உள்ளது ஆனால்,
ஏன் வருடத்தில் ஒரு போகம் மட்டுமா விவசாயம் செய்ய முடிகிறது?
ஏன் ஆழ்துளை கிணறுகள் 700  அடியிலும் நீர் இன்றி காய்ந்து விட்டன ?
ஏன் பருவ மழை போதிய அளவு பெய்வதில்லை ?
ஏன் ஆறுகள் கண்மாய்கள் நீர் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன?
ஏன் கிணறுகள், ஏரிகள் குளங்கள் வறண்டு கிடக்கின்றன?
எல்லாவற்றுக்கும் நாம் தான் காரணம் !!!!!!!!!!!!

இதோ....

நம்முடைய நீர் பிடிப்பு பகுதிகள் எத்தனை சதவீதம் ஆக்கிரமிக்கபடாமல் உள்ளன??
அப்படியே இருந்தாலும் அதன் ஆழம் எவ்வளவு??
அதற்கும் நீர் வரும் கலவைகள் சரியாக உள்ளனவா?
மழை வர உதவி புரியும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

மூன்று போகம் நீர்பசன்த்திற்கு தேவையான ஏரிகளின் இன்றைய நிலை என்ன?
ஒன்று ஆக்கிரமிப்புகளால் சுருங்கி விட்டது , இல்லை மண் அரிப்பினால் மேடாகிவிட்டது?
என்ன செய்ய வேண்டும்..
முதலி ஏரி குளங்கள் ஆழப்படுத்த வேண்டும் ( 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மக்களால் ஆழப்படுத்தும் பணியினால் ஒரு சதவீதம் கூட பயன் இல்லை)
ஏரியின் கீழ் இருக்கும் நிலங்களின் பரப்பளவுக்கு மூன்று போகம் நீர்பாசனம் செய்ய தேவைப்படும் அளவுக்கு ஏரிகளின் கொள்ளளவு உயர்த்தப்பட வேண்டும்.


மேலும் நீர் வரத்து கால்வாய்கள் சரியான முறையில் அம்மைக்க வேண்டும்.
ஏரியில் இருந்து வெளியேறும் கால்வாய்களும் சீரமைக்கப்பட வேண்டும்.
விவசாயிகள் அனைவருக்கும் நீர் மேலாண்மை பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
புதிய சொட்டு நீர் பாசனம் போன்ற முறைகளை விவசாயிகள் செய்ய பயிர்க்கடன் மற்றும் அரசினால் அளிக்கப்பட வேண்டும்.
பயிர் சுயற்சி முறை கட்டாயமாக பின் பற்றப்பட வேண்டும்.
ஏரிகள் பசனைதை சீரமைப்பதன் மூலம் விவசாயிகளின் இலவச மின்சாரம் வீணாகாது

மேலும் ஏரிகளில் மீன் வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
விவசாய வேலைகள் இல்லாத நாட்களில் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்?
விவசாய வேலைகளுக்கு இயந்திரங்களின் முக்கித்துவம் இன்றியமையாதது, நடவு களை எடுத்தல் போன்றவற்றிற்கும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

சீரான கால்வாய்கள் அமைக்க வேண்டும் .

ஏரிகளை சுற்றி மரங்கள் நடவேண்டும் இதனால் கரை பலப்படுவதோடு மான் அரிப்பும் தடுக்கப்படும் மற்றும் மழை வார இவை பெரிதும் உதவும்.